இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடந்த ஆயிரத்து 757 வீதி விபத்துகளில் ஆயிரத்து 870 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இந்த புள்ளிவிவரத்தை போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் தலைவர் இந்திக்க ஹபுகொட வெளியிட்டுள்ளார்.
வீதி விபத்துகளால் நாளாந்தம் சுமார் ஏழு முதல் எட்டு பேர் வரை உயிரிழப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சாரதிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், பாதசாரிகள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட அனைத்து வீதி பயனர்களும் போக்குவரத்துச் சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என பிரதி பொலிஸ் தலைவர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார.
- அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் யுவதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை
- இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரரின் ரூ.5.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்!
- பாதிக்கப்பட்ட மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்த பொது நடவடிக்கை செயலணியை உருவாக்குங்கள்.
- இலங்கையில் ஊடகங்களை அடக்குவதற்கு பொலிஸார் முயற்சி – சாகர காரியவசம் குற்றச்சாட்டு
- மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை புதிய இணையத்தளம் (wptaxi.net) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
- புத்தளம் – வனாத்தவில்லு பிரதேசத்தில் மாட்டிறைச்சியுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
அதேநேரம், வீதி நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், மேலும் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க சுய ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.