36



உடல் மெலிந்தாலும்
உறுதியின் எரிமலை சிதறவில்லையே!
பசி நெருங்கினாலும்
போராட்டத்தின் நெருப்பு அணையவில்லையே!
திலீபனின் உள்ளம் –
ஒரு புரட்சியின் நரம்பு,
ஒரு தேசத்தின் துடிப்பு,
ஒரு தலைமுறையின் தீப்பொறி!
“பிறர் வாழட்டும்,
என் உயிர் கருகட்டும்” என்ற
சத்தியத்தின் சுடரில்
தியாகம் ஒரு மொழியாகி விட்டது.
அமைதியான மரணப் பசி –
ஆனால் அதற்குள்
மின்னல் போலக் குரல்:
“தமிழர் சுதந்திரம் தான்
என் உயிரின் அர்த்தம்!”
You Might Be Interested In
- டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன!
- வீரத்தின் ஊற்றாக, விடுதலையின் புயலாக எழுந்த எங்கள் தளபதி ஜோய்
- இலங்கையின் பொருளாதார பிளவு: கடன், நாணய அழுத்தம் மற்றும் கட்டமைப்பு சமநிலையின்மை
- அகவை வாழ்த்து – டிசம்பர் 15
- மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பித்தால், இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் – இலங்கை தேர்தல் ஆணையம்
- உக்ரைனின் ஓஷாட்பாங்க் சொத்துக்கள் ஹங்கேரியில் தொடர்ந்தும் முடக்கப்பட்ட நிலையில், உக்ரைன் அதிகாரிகள் எவ்வாறு தடுத்து விசாரிக்கப்பட்டார்கள் என்ற புதிய தகவல்கள் வெளிச்சம்
தியாகத்தில் பிறந்த தீபமே!
உன் ஒளியில்
இன்னும் எழும் புரட்சி,
இன்னும் எரியும் தீக்குண்டு,
இன்னும் விழிக்கும் தேசம்!

எழுதியவர்: ஈழத்து நிலவன்
“தியாகத்தில் வடிக்கப்பட்ட எழுத்து, தமிழின் நிலையான தீயை தாங்கி நிற்கும்.”
You Might Be Interested In