இதுபற்றிய விவரம் வருமாறு;
பதான் மாவட்டத்தில் உள்ள மோதி பிப்லி கிராமத்தின் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில், சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது, அவ்வழியாக இன்று (05.10.2025) சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக, சரக்கு லாரி தவறான திசையை நோக்கி சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த பிக்கப் வேன் ஒன்றின் மீது மோதியது. அதன் பின்னால் வந்து கொண்டிருந்த ஜீப் ஒன்றும், இரு பைக்குகளும் ஒன்றுடன் ஒன்று மோதின.
விபத்தை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு திரண்டனர். போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் சடலங்களை பொதுமக்கள் மீட்டனர். விபத்தில் மொத்தம் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தும் நிலையில், வாக்காளர் சேவைகளை விரிவுபடுத்தும் தேர்தல் ஆணையம்
- இந்தியாவின் நிலப்பரப்பில் 61 சதவீதம் நிலநடுக்க அபாயத்தில்.
- இந்தியாவின் நலனே வழிநடத்தும்!
- இளைஞர்களைப் பாதுகாக்க ஆந்திரப் பிரதேச முதல்வர் நடவடிக்கை, 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
- அமெரிக்கா-ஈரான் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ரத்து செய்துள்ளன.
- இந்தியாவில் தங்கக் கடன் வளர்ச்சி 53 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.