இதுபற்றிய விவரம் வருமாறு;
பதான் மாவட்டத்தில் உள்ள மோதி பிப்லி கிராமத்தின் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில், சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது, அவ்வழியாக இன்று (05.10.2025) சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக, சரக்கு லாரி தவறான திசையை நோக்கி சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த பிக்கப் வேன் ஒன்றின் மீது மோதியது. அதன் பின்னால் வந்து கொண்டிருந்த ஜீப் ஒன்றும், இரு பைக்குகளும் ஒன்றுடன் ஒன்று மோதின.
விபத்தை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு திரண்டனர். போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் சடலங்களை பொதுமக்கள் மீட்டனர். விபத்தில் மொத்தம் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல்களால் நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
- காசா அமைதி முயற்சியில் இந்தியாவை இணைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு
- இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
- ஒற்றையர் பிரிவு காலிறுதியில் வைஷ்ணவி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்!
- பெங்களூருவில் பெரும் போதைப்பொருள் வலை உடைப்பு; ரூ.4 கோடி மதிப்புள்ள நர்கோட்டிக்ஸ் பறிமுதல், 10 பேர் கைது
- பாஜக தேசியத் தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபீன் — முதல் கட்ட அமைப்பு மாற்றங்கள் தொடக்கம்