நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக களு, களனி, ஜின் ஆறுகள் மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக அத்தனகலு ஓயாவை அண்டிய மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
பல தாழ்வான பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல மாகாணங்களில் அவ்வப்போது மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சில பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- இலங்கை அரசாங்கம் எரிபொருள் விலைகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுகிறது, – முஜிபுர் ரஹ்மான்.
- இலங்கையில் ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்றதற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
- இலங்கையில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் இந்த நாட்டின் ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர்!
- கலட்டி பகுதியில் 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது
- அரச வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக கொழும்பில் இலங்கை அரச வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சட்டவிரோதமாக அலங்காரச் செடிகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் , காங்கேசன்துறை முதல் திருகோணமலை மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான ஆழமற்ற கடல் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.