இதுபற்றிய விவரம் வருமாறு;

ஹர்மதா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட லோஹா மண்டி என்ற பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. பிற்பகல் 1 மணியளவில் சாலை எண் 14ல் இருந்து சரக்கு லாரி ஒன்று நெடுஞ்சாலையில் நுழைய முயன்றது.
அப்போது எதிர்பாராத விதமாக, அந்த சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. விபத்தால் அங்கு போக்குவரத்தில் திடீர் சீர்குலைவு ஏற்பட, மொத்தம் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.
விபத்தில் மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று தெரிகிறது.
- கனடாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய UAE — கடைசி ஓவரில் திகில் வெற்றி
- ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 289 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது.
- புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில்; “தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை திறந்து பார்க்க வேண்டாம்.” என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
- ஆந்திராவில் தொடரும் மோதல்: நக்சலைட்டுகள் 7 பேரை சுட்டுக்கொன்றனர்
- பிரான்சுக்கு போலி விசாக்களை ஏற்பாடு செய்து கொடுத்த கும்பலை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
- இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைத்து, மத்திய கிழக்கு மூலங்களுக்கு மாறுகிறது
இதுகுறித்து ஜெய்பூர் கலெக்டர் ஜிதேந்திர சோனி கூறுகையில், லோஹா மண்டி அருகே சரக்கு லாரி மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 12 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர் என்றார்.
கோர விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்தன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.