இந்தச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை ( 4 நவம்பர் 2025 ) புது டில்லியில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புதுடெல்லியில் சந்தித்த சந்தர்ப்பம் குறித்து, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

நிதியமைச்சர் இலங்கையைப் பற்றி மிகுந்த அன்புடன் பேசியதுடன், இலங்கையை “ஒவ்வொரு வளத்தாலும், மனித ஆற்றலாலும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு” என்று வர்ணித்தார். மத்திய அமைச்சரின் இந்தக் கருத்துக்கள், இலங்கையின் உயர்நிலையில் உள்ள வளங்களையும், மனித ஆற்றலையும் நாடு முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, அதன் உண்மையான திறனை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறது.

இலங்கைக்கு நிர்மலா சீத்தாராமன் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு மற்றும் அன்பான வார்த்தைகளுக்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.
- “நக்சல் பிரச்சனைகளில் இருந்து இந்தியா விரைவில் விடுதலை பெறும்.” – இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
- டில்லி மெட்ரோவின் திட்டத்தின் கீழ் மூன்று புதிய வழித்தடங்கள் அமைக்க, டில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது!
- ஒவ்வொரு மாநிலத்திலும் மருத்துவ மையங்கள்
- ராஜமஹேந்திரவரத்தில் சிறுநீரக செயலிழப்பு மரண எண்ணிக்கை 11‑ஆக உயர்வு
- ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம்
- கேரளாவின் புதிய முதலமைச்சரின் பெயர் நாளை அறிவிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு.