வானிலை மையம் அறிக்கை:

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இந்த அமைப்பு, இன்று வடக்கு, வடமேற்கு திசையில், மியான்மர் – வங்கதேச கடற்கரையை நெருங்க வாய்ப்புள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் வடமாவட்டங்களில் சில இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், திருச்சி மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் காரைக்காலில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- நவம்பர் 15 ஆம் தேதி கல்லணைக்கு அருகில் உள்ள பூதலூர் பகுதியில் “தண்ணீர் மாநாடு” – தமிழம் செந்தில்நாதன்
- பெருங்களத்தூரில் சாலை அமைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் சாலையைத் தோண்டி மின்சார வாரியம் ஒரு அட்டூழியத்தைச் செய்கிறது.
- “திமுக அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது” – அதிமுக பொதுச்செயலாளர்
- முன்னாள் ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் சீமான்! | ராணுவக் கட்டுப்பாட்டில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு?
- வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழக சட்டசபை அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை கனமழைக்கு வாய்ப்புஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.