வானிலை மையம் அறிக்கை:

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இந்த அமைப்பு, இன்று வடக்கு, வடமேற்கு திசையில், மியான்மர் – வங்கதேச கடற்கரையை நெருங்க வாய்ப்புள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் வடமாவட்டங்களில் சில இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், திருச்சி மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் காரைக்காலில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- பரமக்குடி எஸ்எஸ்ஐ, பெண் காவலர்களை ரகசியமாக படம் பிடித்த குற்றச்சாட்டில் கைது
- ‘பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது’ – சென்னை உயர் நீதிமன்றம்
- “சீமைக்கருவேல் மரங்களை அகற்ற தமிழக அரசு பல ஆண்டுகளாக ஒரு குழுவை அமைத்தும், அதில் கவனம் செலுத்தப்படவில்லை” – ம.தி.மு.க பொதுச் செயலாளர்
- தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ரூ.4.66 லட்சம் கடன் சுமையைக் கொண்டுள்ளது!
- விகடனும் மொத்த வியாபாரமும் ! | நான் சொன்னது என்ன அவர்கள் எழுதியது என்ன ?
- திண்டுக்கல்லில் நடைபெறும் ராகுல் காந்தி மாநாட்டுக்கு 3 லட்சம் பேரை திரட்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை கனமழைக்கு வாய்ப்புஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.