வானிலை மையம் அறிக்கை:

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இந்த அமைப்பு, இன்று வடக்கு, வடமேற்கு திசையில், மியான்மர் – வங்கதேச கடற்கரையை நெருங்க வாய்ப்புள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் வடமாவட்டங்களில் சில இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், திருச்சி மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் காரைக்காலில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மூன்றாவது இடத்திற்குப் பின்தங்கியுள்ளார்.
- ஜன நாயகன் திரைப்பட சென்சார் வழக்கில் தீர்ப்பு ஜனவரி 27 அன்று
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – சிபிஐ விசாரணை தற்காலிகமாக நிறுத்தம்: உச்சநீதிமன்றம் தீர்மானம்
- பூதலூர் கட்சி மாவட்ட தேவைகளும் – NTK தீர்வுகளும்! முனைவர் செந்தில்நாதன்
- “நிதி நிழலில் வளர்ச்சி: கடன் சுமையை சமநிலைப்படுத்தும் தமிழ்நாட்டின் புதிய பொருளாதாரப் பாதை”
- தமிழர் மனங்களில் ஆழவேரூன்றிய சினிமா மோகம்: ஓர் உளவியல் மற்றும் அரசியல் பகுப்பாய்வு
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை கனமழைக்கு வாய்ப்புஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.