24

ராகமை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (12.11.2025) மாலை ராகமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ராகமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ராகமை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் துட்டுவேகெதர பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In