தித்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்து துணை நிற்கிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்திடம் 20,000 பாலிசாக்குகளை கையளித்தது. இந்த பாலிசாக்குகள் கரைகளை வலுப்படுத்தவும், வெள்ள நீரின் வேகத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில் தகவல் தொடர்பு உபகரணங்களை அமெரிக்கா கையளித்ததன் தொடர்ச்சியாக இந்த உதவி அமைந்துள்ளது.
மேலும், இத்தகைய சவாலான நேரத்தில் எங்களின் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது. வரும் வாரங்களில், ஜெனரேட்டர்கள், சமையல் அடுப்புகள், நீர் தொட்டிகள் மற்றும் கூடாரங்கள் ஆகியவற்றையும் உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து நாங்கள் வழங்குவோம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை காண்பித்த சந்தேகத்தின் பேரில் கைது.
- இலங்கை அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்!
- இலங்கை மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
- 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் – இலங்கை வானிலை ஆய்வுத் துறை
- இலங்கையில் ஏற்பட்ட திடீர் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுத்திய பேரிடரிலிருந்து மீள்வதற்கு 50 பில்லியன் ரூபாவை மதிப்பிட்டு குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை இன்றைய வானிலை அறிக்கை