அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் உடனடியாக தெரிவித்துக் கொள்ள இரண்டு கட்டணமில்லா தொலைபேசி சேவைகள் தற்போது 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுடன் இணைந்துள்ள தேசிய மகளிர் சபையின் 1938 பெண்கள் உதவி அவசர தொலைபேசி இலக்கம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 சிறுவர் உதவி அவசர தொலைபேசி இலக்கங்கள் மூன்று மொழிகளில் இலவசமாக செயல்படுகின்றன.
பெண்கள் தொடர்பான தகவல்களுக்கு – 1938
சிறுவர்கள் தொடர்பான தகவல்களுக்கு – 1929
இந்த இரண்டு சேவைகளுக்கும் கட்டணம் இன்றியே, 24 மணி நேரமும் அழைத்து தகவல் பகிர முடியும்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, நலன், அவசர உதவி மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இவ்விரு ஹாட்லைன்களும் முக்கிய பங்கு வகிப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
தேவைப்படும் தருணங்களில் உடனடியாக தகவல் தெரிவித்து பாதுகாப்புக்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
- மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று பல வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர், மேலும் எட்டு பேர் காயமடைந்தனர்.
- மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைப்பது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்: உயர் நீதிமன்றம்
- சாயல்குடியில் சாலையில் கிடந்த தங்கச் செயினை போலீஸில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர்களை போலீசார் பாராட்டி கவுரவித்தனர்.
- “காயங்களுக்கு அப்பால்” காபி டேபிள் புத்தக வெளியீடு – இலங்கையில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி.
- டெல்லியில் இருந்து மான்செஸ்டருக்குச் சென்ற இண்டிகோ விமானம் திடீரென வான்வெளி மூடப்பட்டதால் டெல்லிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- அன்ரன் பாலசிங்கம் – சு. ப. தமிழ்செல்வன் – வணக்க நிகழ்வு 2025 – சுவிஸ்
