தென் மாவட்டங்களை நடுங்கவைக்கும் வகையில் நேற்று கடுமையான குளிர் பதிவாகி உள்ளது. மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பகலிலேயே ஊட்டி, கொடைக்கானலை ஒத்த குளிர் நிலவியது.

திருநெல்வேலியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று 22 டிகிரி வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. டிசம்பர் – ஜனவரி மாதங்களிலும் இதுபோன்ற பகல் நேர குளிர் இதற்கு முன் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் 22.6 டிகிரி வெப்பநிலை பதிவாகி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு 24 டிகிரி வெப்பநிலை மட்டுமே பதிவாகியிருந்தது.
தூத்துக்குடியில் நேற்று 20.5 டிகிரி வெப்பநிலை பதிவு செய்யப்பட்டு, 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட 25.5 டிகிரி சாதனையை முறியடித்துள்ளது.
- பொங்கல் விடுமுறை அறிவிப்பு: தமிழகப் பள்ளிகள் மூன்று நாட்கள் மூடல்
- திருவையாறு தொகுதியும்! எமது தேர்தல் அணுகுமுறையும்!! முனைவர் செந்தில்நாதன்
- முகம் அறியாத உறவிற்கு ஒரு கடிதம் – தமிழீழத்தின் உடன்பிறப்பு.
- திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- சென்சார் மறுபரிசீலனையால் விஜய்யின் ஜன நாயகன் வெளியீடு தாமதம்
- வேளாங்கண்ணியில், மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக, கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக, சீர்வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள்
கோவில்பட்டி 21.8, தென்காசி 21, திருச்செந்தூர் 20, பாம்பன் 23, கன்னியாகுமரி 26.6 என தென் மாவட்டங்கள் முழுவதும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குளிர் பதிவாகியுள்ளது. இத்தகவலை தன்னார்வ வானிலை ஆய்வாளர் தென்காசி ராஜா தெரிவித்துள்ளார்.