தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
புயல் காரணமாக, இலங்கையில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு வாழும் தமிழர்கள் பலர், தங்களின் வீடு மற்றும் உடைமைகளை இழந்து, தவித்து வருகின்றனர். போதிய முகாம் இல்லாததால், கிரிக்கெட் மைதானத்தில் தங்க வைத்திருப்பது, மனதை கனக்க செய்கிறது.
இலங்கையில் தவிக்கும் தமிழர்களை மீட்க, தமிழக அரசும், மத்திய அரசும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை விமான நிலையத்தில், கடந்த மூன்று நாட்களாக, உணவு கூட கிடைக்காமல் தவித்து நிற்கும் 150 தமிழர்கள் உட்பட 300க்கும் அதிகமானோரை, தாயகம் அழைத்து வர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகெங்கும் உள்ள தமிழர்கள், கனமழை வெள்ளத்தால், இலங்கையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கு, தங்களால் இயன்ற பொருளாதார உதவிகள் செய்ய முன்வர வேண்டும்’ இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
- இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- யாழ்ப்பாணம், நாவற்குழியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார்
- வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.டி. அப்பச்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- தமிழக மீனவர்களால் தாக்கப்பட்ட பரித்திதுறை மீனவர் வழக்கில் நீதி கிடைக்கச் செய்யுமாறு ஆளுநரையும் உபாலி சமரசிங்கவையும் ரவிகரன் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.
- “ஒரு திரைப்பட டிக்கெட்” போல தவெக விருப்ப மனு வினியோகம் ஒன்றரை மணி நேரத்திற்குள் 10,000 மனுக்கள் விற்றுத் தீர்ந்தன.
- 🚨களனி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவசரகால வெளியேற்ற அறிவுறுத்தல்.