இது குறித்து, பீதர் எஸ்.பி., பிரதீப் குன்டி, நேற்று அளித்த பேட்டி:
பீதர் மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக்க முயற்சிக்கிறோம்.
எந்த காரணத்தை கொண்டும், போதைப்பொருட்களை கடத்தவோ, விற்கவோ விட மாட்டோம். இச்செயலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுப்போம்.
பீதரின் ராஜேஷ்வரா கிராமத்தின் அருகில் நேற்று முன்தினம் இரவு சரக்கு வாகனத்தில் ஆந்திராவில் இருந்து, கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. பீதர் நகர போலீசார், அங்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- இந்தியாவில் வெளிநாட்டு சொத்துக்களை மறைத்து வைத்திருந்ததாக 25,000 பேருக்கு வரித்துறை நோட்டீஸ்.
- “மூளையை உண்ணும் அமீபா தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது,” பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
- பெங்களூருவின் 369 வார்டுகளுக்கான ஒதுக்கீட்டு அறிவிப்பு வெளியீடு: புதிய மாநகராட்சிகளில் ஒதுக்கீட்டு சீர்மையைக் குறித்து கேள்விகள் தொடர்கின்றன
- இந்தியாவிற்கு 3 நாள் பயணமாக இலங்கை பிரதமர்
- U19 கிரிக்கெட் உலகக் கோப்பை: வைபவ் சூர்யவன்ஷியின் 80 பந்துகளில் 175 ரன்கள், இறுதிப் போட்டியில் இந்தியா 411 ரன்கள் எடுக்க உதவியது.
- உலக சந்தை அசாதாரணத்தால் இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு
வாகனத்தில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 660 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 6.60 கோடி ரூபாய். இரண்டு கிலோ வீதம் பாக்கெட்டுகளாக்கி, மூடையில் வைத்திருந்தனர்.
ராஜ்குமார் ஹூகாரா, 35, இவரது சகோதரர் சஞ்சுகுமார் ஹூகாரா, 32, கைது செய்யப்பட்டனர். இவர்கள் பீதரின் மகதாளா கிராமத்தை சேர்ந்தவர்கள்.
ஒடிஷாவில் இருந்து, கடத்தி வரப்பட்ட கஞ்சா, ஆந்திரா, ஹைதராபாத் வழியாக ராஜேஷ்வரா மூலமாக மஹாராஷ்டிரா கொண்டு செல்லப்பட்டது, விசாரணையில் தெரிந்தது. – இவ்வாறு அவர் கூறினார்.