குருணாகலில் பொல்கஹவெல பிரதேசத்தில் மருந்தகம் நடத்தும் போர்வையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இரண்டு சந்தேக நபர்கள் பொல்கஹவெல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் பொல்கஹவெல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடிதரமுல்ல மற்றும் பனலிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 24 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 2,000 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், போதை மாத்திரைகள் அடங்கிய 10 பொதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இருவரும் மருந்தகம் நடத்தும் போர்வையில் நீண்ட காலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியா தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வலியுறுத்தி உள்ளார்.
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போக்குவரத்து மையங்கள் மீது தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள்; வளைகுடா பதற்றம் மேலும் தீவிரம்
- 21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு: இந்திய பிரதமர் மோடி
- ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36’வது பொது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
- உலுக்குளம் கிராம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
- அப்படியெல்லாம் ஓடிட மாட்டோம்பா ! | பேசும் போதே அழுகை வந்தது