ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை (29-01-2026) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 804 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 799 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது,:

443 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும்,
878 கிராம் ஐஸ் போதைப்பொருளும்,
04 கிலோ 423 கிராம் 180 மில்லிகிராம் கொக்கேயின் போதைப்பொருளும்,
02 கிலோ 208 கிராம் கஞ்சா போதைப்பொருளும்,
9540 கஞ்சா செடிகளும்,
001 கிராம் குஷ் போதைப்பொருளும்,
009 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும்,
6231 போதை மாத்திரைகளும்,
274 கிராம் 250 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும்,
02 கிலோ 006 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்களில் 05 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
- உலகமுள்ளவரை உனக்கு வயது – ஈழக்கவிஞர் புதுவை இரத்தினதுரை
- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கோவிலில் உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற இரவு காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை
- இலங்கை மின் கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மூடி மறைக்கும் நாடகமா?
- Sri Lanka Doubles Down on Economic Reforms and Regional Security Partnerships
- கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2026!
- சுவிசில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025