சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பாக போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு வினியோகம், கடந்த பிப்., 20ம் தேதி துவங்கியது. தி.மு.க., தலைமையகமான சென்னை அறிவாலயத்தில், மார்ச் 2 வரை, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்படும் என, தி.மு.க., அறிவித்தது.
விருப்ப மனு அளிப்போர் எண்ணிக்கை அதிகரித்ததால், மார்ச் 6 வரை நீடிக்கப்பட்டது. அதன்படி, நேற்றுடன் விருப்ப மனுக்கள் வினியோகம் நிறைவு பெற்றது. மொத்தமுள்ள, 234 தொகுதிகளுக்கும், நேற்று மதியம் நிலவரப்படி, 11,000 விருப்ப மனுக்கள் விற்கப்பட்டு உள்ளன.
ஒரு மனுவின் கட்டணம் 1,000 ரூபாய். பூர்த்தி செய்த விண்ணப்ப கட்டணமாக பொதுத்தொகுதிக்கு, 25 ஆயிரம் ரூபாய், தனித் தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாய் என வசூலிக்கப்பட்டது. அந்த வகையில், 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், போடிநாயக்கனுார் தொகுதிக்கும், அவரது மகன் ரவீந்திரநாத், ஆண்டிபட்டி தொகுதிக்கும் விருப்ப மனு அளித்தனர். திருவண்ணாமலை தொகுதியில், மீண்டும் போட்டியிட அமைச்சர் வேலு, கரூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட ஏராளமான தி.மு.க.,வினர் நேற்று, விருப்ப மனுக்கள் அளித்தனர்.
- சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.1080 அதிகரித்துள்ளது.
- தமிழர் தனிநாடு: ஆதித்தனாரின் ‘தமிழப் பேரரசு’ – ஒரு வரலாற்று ஆய்வு
- காற்றழுத்த தாழ்வு நிலை அதிகரித்துள்ளதால், இன்று தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்.
- “சீமைக்கருவேல் மரங்களை அகற்ற தமிழக அரசு பல ஆண்டுகளாக ஒரு குழுவை அமைத்தும், அதில் கவனம் செலுத்தப்படவில்லை” – ம.தி.மு.க பொதுச் செயலாளர்
- பரமக்குடி எஸ்எஸ்ஐ, பெண் காவலர்களை ரகசியமாக படம் பிடித்த குற்றச்சாட்டில் கைது
- மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைப்பது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்: உயர் நீதிமன்றம்
