சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பாக போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு வினியோகம், கடந்த பிப்., 20ம் தேதி துவங்கியது. தி.மு.க., தலைமையகமான சென்னை அறிவாலயத்தில், மார்ச் 2 வரை, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்படும் என, தி.மு.க., அறிவித்தது.
விருப்ப மனு அளிப்போர் எண்ணிக்கை அதிகரித்ததால், மார்ச் 6 வரை நீடிக்கப்பட்டது. அதன்படி, நேற்றுடன் விருப்ப மனுக்கள் வினியோகம் நிறைவு பெற்றது. மொத்தமுள்ள, 234 தொகுதிகளுக்கும், நேற்று மதியம் நிலவரப்படி, 11,000 விருப்ப மனுக்கள் விற்கப்பட்டு உள்ளன.
ஒரு மனுவின் கட்டணம் 1,000 ரூபாய். பூர்த்தி செய்த விண்ணப்ப கட்டணமாக பொதுத்தொகுதிக்கு, 25 ஆயிரம் ரூபாய், தனித் தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாய் என வசூலிக்கப்பட்டது. அந்த வகையில், 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், போடிநாயக்கனுார் தொகுதிக்கும், அவரது மகன் ரவீந்திரநாத், ஆண்டிபட்டி தொகுதிக்கும் விருப்ப மனு அளித்தனர். திருவண்ணாமலை தொகுதியில், மீண்டும் போட்டியிட அமைச்சர் வேலு, கரூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட ஏராளமான தி.மு.க.,வினர் நேற்று, விருப்ப மனுக்கள் அளித்தனர்.
- புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை’ – அ.தி.மு.க.
- கலவரபூமியாகும் மதுரை ! எது நியாயம் ? எது அரசியல் ?
- 🎙️செந்தில்நாதன் பேட்டி | திருமாவை பார்த்தால் பாவமாக இருக்கிறது | இஸ்ரேலில் தமிழ்
- இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு வீர வணக்கத்துடன் ஆழ்ந்த இரங்கல்
- அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்துள்ள லஞ்ச ஊழல் புகார் தொடர்பாக அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். – அண்ணாமலை
- ‘கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
