மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில், வயல் நிலமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (11) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் சின்னவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 08ஆம் திகதி வீட்டிலிருந்து சென்ற வரவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வயல் பகுதியொன்றில் இவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் மூன்று பேர் சந்கேதத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “முதலாம் நாள் 15.09.1987” தியாக வேள்வி.!
- புலனாய்வுத்துறை லெப்.கேணல் அமுதன் (மல்லி) 17.11.1994
- ஐரோப்பிய ஒன்றியம்–இந்தியா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்
- தமிழகத்தில் ரூ.75 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்களை தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் பறிமுதல் செய்துள்ளன.
- ஐரோப்பிய ஒன்றியம் X நிறுவனத்திற்கு ரூ.1,259 கோடி அபராதம்
- கர்நாடகாவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
இது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவும் நிலையில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.