மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில், வயல் நிலமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (11) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் சின்னவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 08ஆம் திகதி வீட்டிலிருந்து சென்ற வரவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வயல் பகுதியொன்றில் இவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் மூன்று பேர் சந்கேதத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- அன்னை பூபதி – விளையாட்டுப்போட்டி 2026 சுவிஸ்
- சிறிலங்காவின் சுதந்திரநாள் – தமிழினத்தின் கரிநாள் | பிரான்சு 04.02.2026
- சட்டத்தரணி தம்பதி கொலையானது நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ள சந்தர்ப்பத்தில், மிகவும் பாதுகாப்பு மிக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. – ரஜித லக்மால்
- தமிழீழ விடுதலையின் சாட்சியங்களாக தமிழீழ மாவீரர் துயிலும் இல்லங்கள்
- கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க்கின் நிலைப்பாட்டுக்கு பிரிட்டன் திறந்த ஆதரவு
- இரான்–இஸ்ரேல் பதற்றம் தீவிரமாவதை இந்தியா கவனமாக கண்காணிப்பு.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
இது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவும் நிலையில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.