பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பாக நேபாள நாட்டின் போக்ரா நகரில் அண்மையில் நடைபெற்ற இந்தியா மற்றும் நேபாளம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில், சிலம்பம் பிரிவில் பங்கேற்ற நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அரசுப்பள்ளி மாணவர்கள் ஐவர் 4 தங்கப்பதக்கங்களையும், 1 வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர் என்பதும், அதில் நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் திருச்செங்கோடு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புமகள் ச.வர்சா அவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தியும் அறிந்து மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.
தமிழ் மண்ணின் பண்பாட்டை பறைசாற்றும் சிலம்பம் சுற்றுதல் விளையாட்டு போட்டிகளில் தங்கள் தனித்திறனை வளர்த்து, சாதனை படைத்துள்ள எனதன்பு மாணவக்கண்மணிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
அன்புமகள் ச.வர்சா மேலும் பல சாதனைகளைப் படைக்கவும் உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
- அமெரிக்க ஜனாதிபதி புதிய அறிவிப்பை அறிவிக்கிறார்: நான் சீனாவுடன் நட்புறவை விரும்புகிறேன், ஆனால் நான் 155% வரி விதிப்பேன்
- டி20 உலகக் கோப்பை: இத்தாலியை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து
- இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு வயது வரம்பு விதிப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்: ஆலோசகர் கருத்து
- சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
- இந்திய மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்து, கேரளா அரசு சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
- இலங்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – நீதி அமைச்சர்