23

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகத்துவாரம் பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட நபரொருவரை கைதுசெய்து அவரது வீட்டை சோதனையிட்ட போதே இந்த வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அதன்போது இந்த வெளிநாட்டு சிகரட்டுகளை கொண்டுவந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளின் மொத்த பெறுமதி 16 இலட்சம் ரூபா ஆகும்.
You Might Be Interested In
- சர்ச்சைக்குரிய ஆங்கில புத்தக தொகுப்பு தொடர்பில் அந்த நபரை கைது செய்து ஏன் இதுவரை விசாரணை மேற்கொள்ளவில்லை? – நளின் பண்டார
- சிறுவர் பாலியல் குற்றங்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கை மூத்த துறவி கைது செய்யப்பட்டார்.
- மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் வெடிக்கும். அவற்றைத் தடுக்கவே அவசரகாலச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.
- இலங்கையில் பணியாளரின் நிர்வாண வீடியோவை பதிவேற்றியதற்காக பிரபல தொழிலதிபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
- இலங்கையின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது!
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In