சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாம்புகளுடன் வர்த்தக பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (11 ) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு – வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தக பெண் ஆவார்.
சந்தேக நபரான வர்த்தக பெண் இந்த பாம்புகளை தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் கொள்வனவு செய்து பின்னர் இந்தியாவுக்குச் சென்று அங்கிருந்து நேற்றைய தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது சந்தேக நபரான வர்த்தக பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ( Green Channel ) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சோதனையில் சந்தேக நபரான வர்த்தக பெண் கொண்டு வந்த பயணப்பொதிகளில் இருந்து 06 பாம்புகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Yellow Anaconda, Ball Python, Speckled King Snake, Honduran Milk Snake ஆகிய வகைகளைச் சேர்ந்த 6 பாம்புகளே கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
- இலங்கை விமான நிலையத்தில் சிகரெட்டுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கைபேசிகளுடன் ஐந்து சீன நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
- இலங்கையில் போதைப்பொருள் மற்றும் மது அருந்திய ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இலங்கையின் இன்றைய வானிலை
- இலங்கையின் பழம்பெரும் நடிகர் “ராமையா சிதம்பரம்” காலமானார்
- பேருந்தை கவனயீனமாக செலுத்திய வழக்கில்; பேருந்து சாரதியொருவருக்கு ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை.
- கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடக படுகொலைகள், ஊடக அடக்குமுறைகளுக்கு நீதியைப் பெறுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரவிகரன்.
