இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி (Admiral Dinesh K Tripathi), இலங்கைக்கு மேற்கொண்ட நல்லெண்ண விஜயத்தின் ஒரு பகுதியாக, கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலயத்திற்கு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23, 2025) விஜயம் மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஆலயத்திற்கு சென்ற இந்திய கடற்படைத் தளபதியை ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக வரவேற்றனர். அங்கு நடைபெற்ற விசேட பூஜைகளில் அவர் கலந்துகொண்டார்.
ஆன்மீக ரீதியான இந்த விஜயத்தின்போது, ஆலய நிர்வாகத்தால் அட்மிரல் தினேஷ் கே திரிபாதிக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த விஜயம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
- பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- இலங்கையில் முதல் ஸ்மார்ட் பஸ் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியது.
- காணாமல் ஆக்கப்பட்ட சிறையில் வாடும் எங்கள் உறவினர்களை விடுவித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுங்கள். – துரைராசா ரவிகரன்.
- அமெரிக்க அரசாங்கம் 06 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளது.
- இலங்கை ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தி
- இலங்கை கடற்படை ஒத்துழைப்பை மறுஆய்வு செய்ய அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளபதி கொழும்பு கப்பல்துறைக்கு வருகை தந்தார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 2025 செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.