149
பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையமென்ற போர்வையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், நான்கு பெண்களைக் கைது செய்துள்ளனர்.
பேலியகொடை பொலிஸாருக்கு செவ்வாய்க்கிழமை (10-03-2026) கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விபச்சார விடுதியை நிர்வகித்த குற்றச்சாட்டில் ஒரு சந்தேக நபரும், அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காகத் தங்கியிருந்த மேலும் மூன்று சந்தேக நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காசன்பிட்டிய, பன்னிபிட்டிய,பொலன்னறுவை,ஹட்டன் பகுதிகளைச் சேர்ந்த 29 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You Might Be Interested In
- இங்கிலாந்து தொடருக்கான இலங்கை T20 அணியை அறிவிப்பு – தசுன் ஷானகா மீண்டும் கேப்டனாக தொடர்கிறார்
- இலங்கையின் தேசிய திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 831 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது!
- 2025’ம் ஆண்டு, 09 குழந்தை திருமணங்கள்; 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு செய்யப்பட்டன – இலங்கை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்.
- இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்
- நுண்கடன் திட்டங்களால் ஏற்பட்ட நெருக்கடியால் இலங்கையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
You Might Be Interested In