அட்டன் – நோர்டன்பிரிட்ஜ் பிரதான விதியில் காசில்ரீ பகுதியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததால் தடைபட்டிருந்த போக்குவரத்து சனிக்கிழமை (13-12-2025) முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பாலத்தில் உள்ள இணைப்புகளும் ஏற்கனவே பழுதாகி இருந்தது மேலும் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக காரணமாக கடுமையாக சேதம் அடைந்து கடந்த மாதம் (29) பாலம் இடிந்து விழுந்தது, அன்று முதல் குறித்த வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.
அதன் பின்னர் பல்லேகெலே இலங்கை இராணுவத்தின் 31வது இராணுவ பொறியியல் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பொறியியல் பிரிவுடன் இணைந்து 15 மீட்டர் நீளமுள்ள புதிய இரும்பு பாலத்தை பொருத்தும் பணிகள் முழுவதும் முடிவடைந்து உள்ளது.
எனவே பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து சனிக்கிழமை (13-12-2025) முதல் போக்குவரத்துக்கு திறக்கப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்!
- கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- பொத்துவில் – உகன பகுதியில் உள்ள கல்குவாரியில் பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- புதிய கல்வி சீர்திருத்தத்தில் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களுக்கு சம வாய்ப்புகள் வரவேற்கத்தக்கது – ஸ்ரீநேசன்
- இலங்கை வானிலை அறிக்கை
- பாடப்புத்தகங்களில் எவ்விடத்தில் ஆபாசமான விடயங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளது? சஜித் பிரேமதாச பகிரங்கமாக குறிப்பிட வேண்டும். – நளிந்த ஜயதிஸ்ஸ