அட்டன் – நோர்டன்பிரிட்ஜ் பிரதான விதியில் காசில்ரீ பகுதியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததால் தடைபட்டிருந்த போக்குவரத்து சனிக்கிழமை (13-12-2025) முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பாலத்தில் உள்ள இணைப்புகளும் ஏற்கனவே பழுதாகி இருந்தது மேலும் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக காரணமாக கடுமையாக சேதம் அடைந்து கடந்த மாதம் (29) பாலம் இடிந்து விழுந்தது, அன்று முதல் குறித்த வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.
அதன் பின்னர் பல்லேகெலே இலங்கை இராணுவத்தின் 31வது இராணுவ பொறியியல் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பொறியியல் பிரிவுடன் இணைந்து 15 மீட்டர் நீளமுள்ள புதிய இரும்பு பாலத்தை பொருத்தும் பணிகள் முழுவதும் முடிவடைந்து உள்ளது.
எனவே பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து சனிக்கிழமை (13-12-2025) முதல் போக்குவரத்துக்கு திறக்கப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இஎம்எப் குழு இலங்கைக்கு வருகை: சைக்க்ளோன் டிட்வா தாக்கத்தின் பொருளாதார சேதத்தை மதிப்பிடும் ஆய்வு
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு மில்லியன் பண மோசடி
- இலங்கையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது!
- இலங்கை வானிலை
- இலங்கைக்கான இன்றைய வானிலை எச்சரிக்கை.
- மஹா ஓயா படுகைப் பகுதிகளில் கணிசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரிக்கிறது.