நீண்டகாலமாக போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் நகரைச் சேர்ந்த ஒரு மருந்தக உரிமையாளர், ஹட்டன் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (24-03-2026) கைது செய்யப்பட்டுள்ளார்.

மருந்தக உரிமையாளர் இளைஞர்களைக் குறிவைத்து, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஹட்டன் பிரதேச சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது விற்பனைக்கான போதை மாத்திரைகள் வர்த்தக நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் இடம் கண்டறியப்பட்டது.
அதன் பின்னர், வர்த்தக நிலைய உரிமையாளரிடம் நடத்திய விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- 1983-இன் பெருநெருப்பும் கிளர்ச்சி இயக்கத்தின் மாற்றமும் (பாகம் 2)
- பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியா தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வலியுறுத்தி உள்ளார்.
- சூடான உலக செய்திகள்
- படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன
- இலங்கை வானிலை அறிக்கை
- பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கை!
கைதான நபரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 1400 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதனையடுத்து, சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.