இலங்கையின் தாமரை கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பங்கி ஜம்ப் ஈர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு கோபுரத்திலிருந்து உலகின் மிக உயரமான பங்கி ஜம்ப் ஆகும்.
கட்டமைப்பு பொறியியலாளர்களுக்கும் கோபுரத்தின் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த திட்டம் தற்போது திட்டமிடல் மற்றும் பொறியியல் கட்டத்தில் உள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதையும், கலாச்சாரம், தொழில்நுட்பம், சாகசம் மற்றும் பொழுதுபோக்குக்கான தெற்காசியாவின் முதன்மையான இடமாக தாமரை கோபுரத்தை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாக தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் வெள்ள அபாயம்! கிண்ணியா, மூதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை!
- இலங்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – நீதி அமைச்சர்
- இலங்கை ஜனாதிபதி நிதியத்தின் மூலம் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் மேல் மாகாண நிகழ்ச்சி இன்று நடைபெறும்!
- செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!
- சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் வாசனை திரவியங்களை இலங்கைக்கு கொண்டு வந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- யுத்தத்தினால் பயங்கரவாதக் கொள்கைகளை மீண்டும் சமூகத்தில் விதைப்பதற்கு இந்நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் உரிமையில்லை என சர்வஜன இளைஞர் முன்னணி எச்சரித்துள்ளது.
இதன்போது, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், இந்த திட்டம் விளையாட்டு அமைச்சின் கீழ் அல்ல, வணிக ரீதியானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்றும் இலங்கையின் சாகச சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.