தாக்குதலின் பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை (25) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் டெல்மார்வத்த, ஹல்கிரான் ஓய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
- உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல்: இதன் முக்கிய சூத்திரதாரிகளான 2 தேரோக்களைக் கைது செய்ய இன்டர்போல் உதவி கோரியுள்ளது.
- ஜெர்மானியப் யுவதியிடம் அத்துமீறல் வழக்கில் மிஹிந்தலை தொல்லியல் துறை ஊழியர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்!
- இலங்கையில் நீதியின் சீரழிவு
- 🌪️ இலங்கை மீது தாக்கிய தித்வா புயல் – இதுவரை தெரிந்தவை
- இலங்கை: பொருளாதார நிலைபேறாக்கம், ஐஎம்எப் சீர்திருத்தங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பில் தொடர்ந்த கவனம்
மேலும் பணப் பரிவர்த்தனை தொடர்பாக அடையாளம் காணப்பட்ட ஒரு நபருடனான தகராறு காரணமாக ஏற்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சந்தேக நபரைக் கைது செய்ய நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.