இலங்கையில் தங்குவதற்கான விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள், பம்பலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை (04-05-2026) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 48 பேர், சீன ஜாதியினர் 02 பேர் என மொத்தமாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 33 ஆண்களும் 17 பெண்களும் உள்ளடங்குவதோடு, கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாவர்.
- இலங்கை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை புதன்கிழமை (18) முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது!
- மத்திய கிழக்கு போர் சூழ்நிலை நாட்டைப் பாதிக்கிறது. இலங்கை அரசின் நடவடிக்கைகள் என்ன?
- அமெரிக்க அரசாங்கம் 06 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளது.
- இலங்கையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 221 நபர்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பு அறிவித்துள்ளது.
- பொதுமக்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது சுகாதார மற்றும் நல்வாழ்வு மைய ஊழியர்களின் பொறுப்பாகும் – சுகாதார அமைச்சர்
- ஆயுதப்படை நினைவு தினமும் பாப்பி தினமும் கொழும்பில் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது வெலிசர தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், அவர்களை விரைவாகத் தத்தமது நாடுகளுக்கு நாடுகடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.