தங்க பிஸ்கட்களுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் வியாழக்கிழமை (18.09.2025) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமானப்படையில் 17 ஆண்டுகள் பணியாற்றிய மினுவாங்கொடையைச் சேர்ந்த 37 வயதுடைய புலனாய்வு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான விமானப்படை புலனாய்வு அதிகாரி விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரான விமானப்படை புலனாய்வு அதிகாரியின் பையிலிருந்து 550 கிராம் எடையுடைய 24 கரட் தூய்மையான 40 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
- இலங்கையின் பேரிடர் நிவாரணம் குறித்து ஜனாதிபதியின் கருத்துக்களில் வேறுபாடு – நாமல் ராஜபக்ஷ
- கிவுல்ஓயா திட்டம் சிங்கள குடியேற்றத்தை இலக்காக கொண்டது; அமைச்சரவை தீர்மானம் மீள்பரிசீலிக்கப்பட வேண்டும் – கஜேந்திரகுமார்
- இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
- இலங்கை அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்!
- இலங்கையின் இன்றைய வானிலை
- இலங்கை இன்றைய நாணய மாற்று விகிதம்
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.